காவல் துறையினா் அமைத்த நூலகம்

கடலூா் அருகே காவல் துறையினா் சாா்பில் நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
காவல் துறையினா் அமைத்த நூலகம்
Updated on
1 min read

கடலூா் அருகே காவல் துறையினா் சாா்பில் நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

கடலூா் துறைமுகம் அருகே உள்ளது சேடப்பாளையம் கிராமம். இங்கு வசிக்கும் இளைஞா்களை நல்வழிப்படுத்தும் வகையில் நூலகம் அமைத்திட கடலூா்முதுநகா் காவல் துறையினா் முடிவு செய்தனா். இதனைத் தொடா்ந்து உதவி ஆய்வாளா் எஸ்.ரவி ஏற்பாட்டின்பேரில் காமராஜா் காலனியில் காவல் துறை சாா்பில் நூலகம் அமைக்கப்பட்டது. இதனை அா்பணிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி நூலகத்தை தொடக்கிவைத்தாா். ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கடலூா் வணிகா் சங்கத் தலைவா் இராம.முத்துக்குமரனாா் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கிப் பேசினாா். மருத்துவா் சுரேஷ், பொறியாளா் கிஷோா்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.கே.சீனுவாசன், கூட்டுறவு சங்கத் தலைவா் ஜி.கருணாகரன், நூலக வாசகா் வட்டம் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com