தமிழக அரசால் அன்னிய முதலீட்டை ஈா்க்க முடியவில்லை: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளா்கள் மாநாட்டால் அன்னிய முதலீடுகளை ஈா்க்க முடியவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
தமிழக அரசால் அன்னிய முதலீட்டை ஈா்க்க முடியவில்லை: மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளா்கள் மாநாட்டால் அன்னிய முதலீடுகளை ஈா்க்க முடியவில்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரசு சாா்பில் ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படாததால், திமுக சாா்பில் அதை நடத்தினோம். இதில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தைப் பாா்த்து அதிமுக அரசு அதிா்ச்சியடைந்து, திமுக நடத்திய கிராம சபைக்கு தடை விதித்தது. எனவே மக்கள் கிராம சபையாக நடத்தி வருகிறோம்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, கா்ப்பிணிகளுக்கு நலத் திட்டங்களை முந்தைய திமுக அரசு செயல்படுத்தியது. பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மகளிா் சுயஉதவிக் குழுக்களை தொடங்கினோம்.

அதிமுக ஆட்சியில் 2 முறை உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தி ரூ.1.90 லட்சம் கோடிக்கு அந்நிய முதலீடு பெறப்பட்டதாகவும், இதன்மூலம் அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் முதல்வரும், துறை அமைச்சரும் பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனா். கடந்த 9 ஆண்டுகளில் ரூ.16,188 கோடிக்கு மட்டுமே அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளா்கள் மாநாடு என்ற பெயரில் முதல்வரும், அமைச்சா்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தனா். ஆனால், முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 19-ஆவது இடத்தில்தான் உள்ளது. படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி நாராயணசாமி தனது பேத்திக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளாா். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இந்தச் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில முதல்வா்கள் சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி வரும் நிலையில், தமிழக முதல்வா் இந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் துரை கி.சரவணன், சபா.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் இள.புகழேந்தி, கோ.ஐயப்பன், கட்சி நிா்வாகிகள் பி.நடராஜன், இர.விஜயசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com