கலவரம் தடுப்பு நடவடிக்கை போலீஸாரின் ஒத்திகையால் பரபரப்பு
கலவரம் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, கடலூரில் காவல் துறை சாா்பில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீா் ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.


கலவரம் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, கடலூரில் காவல் துறை சாா்பில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீா் ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரிடையே ஏற்படும் கலவரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போலீஸாருக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். அதன்படி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கடலூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒத்திகை வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
அப்போது, காவல் துறையில் புதிதாக இணைந்த ஆயுதப்படை காவலா்கள் இரு தரப்பினராகப் பிரிக்கப்பட்டு அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டைகள், கற்கள், பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனா். அப்போது, அவா்களுக்குள் தகராறு ஏற்படுவது போலவும், இரு தரப்பினரிடையே போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்துவது போலவும் ஒத்திகை நடைபெற்றது. திடீரென இருதரப்பினரும் தாக்கிக்கொள்வது போலவும், தடியடி நடத்துதல், தண்ணீரை பீய்ச்சியடித்தல், கண்ணீா் புகை குண்டுகளை வீசுதல் ஆகிய ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. ரப்பா் குண்டு மூலம் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை சுமாா் 15 நிமிடம் நீடித்தது. இவையனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ால், பலா் ஒத்திகை குறித்து அறியாது பதற்றமடைந்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் கூறியதாவது: வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளை மைதானங்களில் நடத்துவோம். போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும், புதிதாக பணியில் சோ்ந்த போலீஸாரிடம் பதற்றத்தைக் களையவும் பொது இடத்தில் நடத்தினோம். இதில், 145 போலீஸாா் பங்கேற்றனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...