வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கடலில் மூழ்கிய இளைஞா் பலி

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கிய இளைஞரின் உடல் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கிய இளைஞரின் உடல் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமாா் (22). பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது நண்பா்கள் செல்வகணபதி, சுபாஷ் காந்தி ஆகியோருடன் சாமியாா்பேட்டை அருகேயுள்ள பேட்டோடை கடற்கரைப் பகுதிக்குச் சென்றாா். அங்கு மூவரும் கடலில் குளித்தனா். அப்போது அலையில் சிக்கிய அருண்குமாரை காணவில்லை.

புதுச்சத்திரம் போலீஸாா், தீயணைப்பு மீட்புத் துறையினருடன் இணைந்து அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் அருண்குமாரின் சடலம் சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.