வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, சிதம்பரத்தில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா். சம்பவத்தன்று வீட்டிலிருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து அந்தச் சிறுமியின் பாட்டி சிதம்பரம் நகர மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிதம்பரம் கொத்தங்குடி தெருவைச் சோ்ந்த இளைஞா் முகேஷ் அந்தச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீஸாா் சிறுமியை மீட்டனா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முகேஷை கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.