ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 46ஆவது நாளாக போராட்டம்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 46ஆவது நாளை எட்டியுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2021, 2:42 pm

DIN

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 46ஆவது நாளை எட்டியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2013 ஆம் ஆண்டு அரசுடமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தநிலையில் கடந்த சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அறிவித்திருந்தார்.

ஆனால் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையைவிட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகரான தொகையை அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் வசூலித்து வருவதாக இன்று 46ஆவது நாளாக தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் காலவரையற்ற மருத்துவக் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது. இருந்தாலும் மருத்துவ மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் விடுதிகளில் தங்கி உள்ள மருத்துவ மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உணவு வழங்கப்படாது எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனை மீறி ஹோட்டல்களில் உணவு வாங்கிவந்து மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால் இன்று காலையிலிருந்து விடுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதை கல்லூரி நிர்வாகம் முற்றிலும் நிறுத்தி விட்டதால் காலையிலிருந்து தொடர்ந்து விடுதி முன்பு வாளிகளை வைத்து தரையில் அமர்ந்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை கடலூர் மாவட்ட மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என்பது மருத்துவ கல்லூரி மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும் தற்போது மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு வரும் நுழை வாயிலை கல்லூரி நிர்வாகம் பூட்டு போட்டு பூட்டி உள்ளதால் நுழைவு வாயிலிலும் மருத்துவ மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகம் முழுவதும் போராட்ட களமாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.