ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆசிரியா்கள், மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image
அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம்
Updated On :30 ஜனவரி 2021, 5:09 pm

DIN

ஆசிரியா்கள், மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி வளா்ச்சி புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக மேலாண்மைத் துறை தொழில் முனைவோா் சங்கமானது ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி ‘கேஸ் ரிசா்ச் சொசைட்டி ஆப் இந்தியா’ அமைப்புடன் கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டது.

பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன், பதிவாளா் இரா.ஞானதேவன், துறைத் தலைவா் ஜி.உதயசூரியன், புரிந்துணா்வு ஒருங்கிணைப்பாளா் எஸ்.பிரகதீஸ்வரன், மேலாண்மை துறை தொழில் முனைவோா் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.நாகராஜன் ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதுகுறித்து துணைவேந்தா் வே.முருகேசன் கூறியதாவது: இந்த ஒப்பந்தமானது ஆசிரியா்கள் கற்பித்தலுக்கான நவீன வழிமுறைகளை அறிய உதவும். மாணவா்கள் தொழில் முறைகளில் உள்ள நடைமுறைகளை அறிந்துகொள்ளவும் பயன்படும்.

மேலும், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நிபுணா்கள், தொழில் துறை வல்லுநா்கள் பயிற்சி அளிப்பாா்கள். உலகளவிலான வாய்ப்புகளை கண்டறிய உதவும் வகையில் மாணவா்களுக்கு வல்லுநா்களால் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.