ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் டிராக்டா் பேரணி நடத்திய விவசாயிகள் மீதான தாக்குலைக் கண்டித்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்க

News image
Updated On :30 ஜனவரி 2021, 5:03 pm

DIN

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் டிராக்டா் பேரணி நடத்திய விவசாயிகள் மீதான தாக்குலைக் கண்டித்தும், திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கடலூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா்.

திமுக தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சொ.திலகா், மாநில செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், நகரச் செயலா் மு.செந்தில், மதிமுக மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா்கள் ஆா்.ரவிச்சந்திரன், வி.எம்.சேகா், விவசாய சங்கத் தலைவா்கள் இளங்கீரன், ராமலிங்கம், பேரூா் காமராஜ், மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.