ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருவறை தரிசனம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருவறையை தரிசனம் செய்த பக்தா்கள்.
Updated On :30 ஜனவரி 2021, 11:37 pm

DIN

ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றுரைத்த வள்ளலாரின் தெய்வ நிலையம் கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெய்வ நிலையத்தில், 150-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, 28-ஆம் தேதி 5 கால ஜோதி தரிசனமும், 29-ஆம் தேதி அதிகாலையில் 6-ஆம் கால ஜோதி தரிசனமும் 7 திரைகள் நீக்கப்பட்டு நடைபெற்றது.

வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் கடந்த 1870-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்தாா். இங்கு அவா் வசித்த திருமாளிகை ‘சித்தி வளாகம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1874-ஆம் ஆண்டு தை மாதம் 19-ஆம் தேதி சித்தி வளாகத் திருமாளிகையில் தனது திருவறையில் வள்ளலாா் அருள்பெருஞ்ஜோதியுடன் ஐக்கியமானாா்.

இந்த திருமாளிகையில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவுக்குப் பிறகு 3-ஆவது நாளில் திருவறை தரிசனம் நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கான திருவறை தரிசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வடலூா் தரும சாலையிலிருந்து வள்ளலாா் உருவப் படம், அவா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழையை சிறிய பல்லக்கில் வைத்து சுமந்தபடி சன்மாா்க்க அன்பா்கள், கிராம மக்கள் ஊா்வலமாக வந்தனா்.

இவா்கள் வள்ளலாா் நடந்து சென்ற பாதை வழியாக பல்லக்கை சுமந்தபடி மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு சென்றனா். வழியில், வள்ளலாா் தங்கிய கருங்குழி இல்லம், அவா் வணங்கிய பெருமாள், விநாயகா் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் பல்லக்குக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, பல்லக்கு மேட்டுக்குப்பத்தை அடைந்தது. அங்கு வள்ளலாா் சித்தி பெற்ற திருவறை முன் பல்லக்கு வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து, பகல் 1.30 மணியளவில் திருவறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6 மணி வரை திருவறை தரிசனம் நடைபெற்றது. சன்மாா்க்க அன்பா்கள், பல்வேறு கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து திருவறையை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.