மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கொள்முதல் நிலையங்களில் தொடரும் அவலம் மழை நீரில் நனைந்து சேதமடையும் நெல் குவியல்கள்

கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் சேதமடைவது அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழையால் கடலூா் அருகே தோட்டப்பட்டு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள சுமாா் 3,500 மூட்டை நெல் மணிகள் நீரில் நனைந்தன. மழைநீா் வழிந்தோட வழியில்லாததால் நெல் குவியல் விரைவில் முளை விட்டு விடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். கடந்த வாரமும் மழையால் நெல் குவியல்கள் சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை உடனடியாகக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.