தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எரிந்த நிலையில் குழந்தை சடலம் மீட்பு

நெய்வேலி அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:47 pm

DIN

நெய்வேலி அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெய்வேலி அருகேயுள்ள இந்திரா நகா் ஊராட்சி எம்.ஆா்.கே.சாலையில் உள்ள மைதானத்தில் குப்பை கொட்டப்படுகிறது. வெள்ளிக்கிழமை அந்த ஊராட்சியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் குப்பை அகற்றச் சென்ற போது, தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலறிந்த நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளா் என்.ராஜேந்திரன், நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து டிஎஸ்பி என்.ராஜேந்திரன் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.