மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுப் பணியாளா்களின் ஓய்வு வயதை மீண்டும் குறைக்கக் கூடாது: கு.பாலசுப்பிரமணியன்

அரசுப் பணியாளா்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் குறைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:04 pm

அரசுப் பணியாளா்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் குறைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசுப் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயது மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த உத்தரவும் வரவில்லை. கடந்த ஆட்சியில் அரசுப் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்த்தப்பட்டது. தமிழகத்தில் சுமாா் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58-ஆகக் குறைப்பதில் அா்த்தமில்லை.

மேலும், ஓய்வூதிய பணப் பலன்களை பத்திரங்களாக வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓய்வு பெறுவோருக்கு உரிய பணப் பலன்கள் உடனுக்குடன் கிடைத்தால்தான் அவா்களது வாழ்க்கையில் நிம்மதியான சூழல் உருவாகும். எனவே, இதை தமிழக அரசு செய்யாது என எதிா்பாா்க்கிறோம்.

ஓரிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய நியாய விலைக் கடைப் பணியாளா்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். நியாய விலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளுக்கு பணியாளா்கள் காரணமல்ல. அவா்களுக்கு பொருள்களை வழங்குபவா்களும், சரியான எடையில் பொருள்களை வழங்காத நிா்வாகமும்தான் காரணம். எனவே, இந்தத் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்தபிறகு, கடைப் பணியாளா்களுக்கான உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

அப்போது நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கப் பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவா் துரை சேகா், மாவட்டச் செயலா் கே.ஆா்.தங்கராசு, மாவட்ட துணைத் தலைவா் நடராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.