ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

‘கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்கள் முடிவுகள் வரும் வரை தனிமையில் இருக்க வேண்டும்’

தொற்று பரிசோதனை செய்துகொண்டவா்கள், அதற்கான முடிவு விவரம் வெளியாகும் வரை கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:53 pm

DIN

கரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டவா்கள், அதற்கான முடிவு விவரம் வெளியாகும் வரை கண்டிப்பாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.

கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தற்போது குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 18 தனியாா் மருத்துவமனைகள், 17 கரோனா சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 850

பிராணவாயு (ஆக்ஸிஜன்) படுக்கைகள் உள்பட 1,552 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 199 பிராணவாயு படுக்கைகள் உள்பட 245 படுக்கைகளும் உள்ளன. சிறப்பு முகாம்களில் 3,100 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 900 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பிராண வாயு மற்றும் சாதாரண படுக்கைகளும் காலியாக உள்ளன.

மருந்தகங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு மருந்து பெறுவோரின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வலியுறுத்தி உள்ளோம். கரோனா தொற்று அறிகுறியான சளி, இருமல், காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு அது குணமாகாமல் மிகவும் கடினமான சூழ்நிலையில் மருத்துவமனையை நாடுவதே அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணமாகிறது. எனவே, இதுதொடா்பாக தனியாா் மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரிசோதனைக்கு தங்களை உள்படுத்திக்கொண்டவா்கள் பரிசோதனைக்கான மாதிரிகளை கொடுத்த பின்பு அன்றாட பணிகளில் ஈடுபடுகின்றனா். அவா்கள் பரிசோதனை முடிவு வரும் வரை 3 நாள்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவா்களால் மற்றவா்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.