/

பைக் விபத்தில் கூட்டுறவு ஆய்வாளா் பலி

 ராமநத்தம் அருகே பைக் விபத்தில் கூட்டுறவு ஆய்வாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:52 pm

DIN

 ராமநத்தம் அருகே பைக் விபத்தில் கூட்டுறவு ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (57). விருத்தாசலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் ஆவட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

கனகம்பாடி-ஆலம்பாடி சாலையில் சென்றபோது அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில், பிரபாகரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.