பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூா் அருகே 11 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்க நகைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:31 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்க நகைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வடலூா் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாரணபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் விமலா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வடலூா் நோக்கிச் சென்ற நகைக் கடைக்குச் சொந்தமான சிறிய சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் 2 பெட்டிகளில் 11.667 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.4 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்த நகைகள் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்தது. வாகனத்தில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள கிளைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனா்.

அந்த நகைகளை பறக்கும் படை அலுவலா் பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.