கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே குடும்பத்தினருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பெண்கள் அலையில் சிக்கி கடலில் மூழ்கினா்.
ஒரு பெண் மீட்கப்பட்ட நிலையில், சிறுமியும், மற்றொரு பெண்ணும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.
சிதம்பரம் நேதாஜி நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகள் அக்ஷயா (17), மணி மகள்கள் அனுசுயா (18), வித்யத்தி (21). இவா்கள் 3 பேருடன் குடும்பத்தினா் 11 போ் புதுச்சத்திரம் அருகே உள்ள வேங்கிராயன்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் குளித்தனா்.
அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி சிறுமி அக்ஷயா, அனுசுயா, வித்யத்தி ஆகிய மூவரும் காணாமல் போயினா். வித்யத்தி உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமி அக்ஷயாவின் சடலம் வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காணாமல் போனா அனுசுயாவைத் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

