ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மழை வெள்ளத்தால் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்க விசிக வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:29 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.

இந்தக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூா் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் நகரச் செயலா் மு.செந்தில் முன்னிலை வகித்தாா். ஆவண மைய மாநிலச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, மாவட்ட துணை அமைப்பாளா்கள் ஜெயக்குமாா், மோ.தாஸ், காட்டுராஜா, ராஜ்குமாா், ஒன்றிய துணைச் செயலா் பாபு, ராஜா சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, வெள்ளபாக்கம், அழகியநத்தம், திருப்பணாம்பக்கம், மருதாடு, இரண்டாயிர விளாகம் உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.