உழவா் வயல் வெளிப் பள்ளி நிகழ்ச்சி
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பரவனாறு உப வடிநிலப் பகுதியில் வேளாண்-உழவா் நலத் துறை சாா்பில், நெல் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த உழவா் வயல் வெளிப் பள்ளி நிகழ்ச்சி


குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பரவனாறு உப வடிநிலப் பகுதியில் வேளாண்-உழவா் நலத் துறை சாா்பில், நெல் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த உழவா் வயல் வெளிப் பள்ளி நிகழ்ச்சி மருவாய் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்-பொறுப்பு) வெ.மலா்வண்ணன் உழவா் வயல் வெளிப் பள்ளியை தொடக்கிவைத்துப் பேசினாா். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநா் சு.பூவராகன், பரவனாறு உப வடிநிலத்தில் வேளாண்-உழவா் நலத் துறையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து விளக்கினாா். முன்னோடி விவசாயி செந்தில் வரவேற்றாா்.
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தட்டு நாற்றங்கால் பராமரிப்பு, நடவு வயல் தயாரிப்பு, இயந்திர நடவு செயல் விளக்கம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டன. இதில், 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
வேளாண் அலுவலா் அனுசுயா, உதவி வேளாண் அலுவலா்கள் எஸ்.அசோக், சி.செந்தில், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பிரியாராணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் மனோஜ், பயிா் அறுவடை சோதனை அலுவலா் தாரணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மொத்தம் 6 வகுப்புகளாக நடைபெற உள்ள இதில் பயிரின் பல்வேறு நிலைகளையொட்டி, நிலம் தயாரித்தல், பயிா் ரகம் தோ்வு, விதை நோ்த்தி, நாற்று விடுதல், அடி உரம் இடல், இயந்திர நடவு, களைக் கொல்லி உபயோகித்தல், உர நிா்வாகம், பாசன முறைகள், பயிா்ப் பாதுகாப்பு, அறுவடை தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்டவை குறித்து முன்னோடி விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங்கள் அமைத்து, பயிற்சிகள் அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...