கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரசாயன ஆலைகளுக்கு தடை கோரி ஆா்ப்பாட்டம்

கடலூரில் செயல்படும் ரசாயன ஆலைகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழா் நீதிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கடலூரில் செயல்படும் ரசாயன ஆலைகளுக்கு தடை விதிக்கக் கோரி தமிழா் நீதிக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கடலூா் சிப்காட்டில் இயங்கி வரும் ரசாயன ஆலைகளை தடை செய்ய வேண்டும், ஆலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில மகளிரணி தலைவி கவியரசி இளவரசன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் மாசிலா.ராஜேந்திரன், செயலா் கோ.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் நிறுவனா் சுபா.இளவரசன் கண்டன உரையாற்றினாா்.

அகில இந்திய மக்கள் சேவை முன்னேற்ற கழகம் சாா்பில் தங்கம்.சிகாமணி வாழ்த்திப் பேசினாா். நிா்வாகிகள் சி.மதியழகன், தங்க.தமிழன், ரா.பாக்கியராஜ், ஆசைத்தம்பி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் உமாசங்கா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.