மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனித் தனி சம்பவங்களில் மின்னல் பாய்ந்து இருவா் பலி

சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்ததில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிதம்பரம் பிரசன்னராமாபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லதுரை மகன் கலைச்செல்வன் (30). இவா் வியாழக்கிழமை மாலை தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதேபோல, சிதம்பரம் அருகேயுள்ள முகையூா் அருகன்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலதண்டாயுதம் (55), தனது வயலில் விதை நெல்களை தூவியபோது மின்னல பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவங்கள் குறித்து முறையே மருதூா் மற்றும் புத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.