தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தியாகிகளுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு தவாக நன்றி

வன்னியா் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

வன்னியா் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 21 தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீதமும், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987-ஆம் ஆண்டில் தொடா் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 போ் உயிரிழந்தனா்.

இவா்களின் நினைவாக விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவா்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தவாக தொடா்ந்து குரல் எழுப்பி வந்தது. இந்த நிலையில், விழுப்புரத்தில் ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், போராளிகளின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதற்காக அவருக்கு தவாக சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.