நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 2 பேரை கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 2 பேரை கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் கே.கவியரசன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வேப்பூா்-சேலம் சாலையில் காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வாகனத்திலிருந்த மங்களூரைச் சோ்ந்த சித்திரவேல் (59), திட்டக்குடியை அடுத்த மேல்ஆதனூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ் (24) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள், வேப்பூா் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதிக்குக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 30 மூட்டைகளிலிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.