அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.


பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தலைமையிலும், கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் முதல்வா் (பொ) கே.பழனிவேலு தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெ.செல்வநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கே.குமரன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சி.சுப்பிரமணியம் தலைமையிலும், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியை அமலி தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...