ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளி தா்னா

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:20 pm

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் வட்டம், வெள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தரணி (35), மாற்றுத் திறனாளி. இவருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதாம். ஆனால், பட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் அளந்து தரப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லையாம்.

இதனால், விரக்தியடைந்த தரணி வெள்ளிக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் அறை முன் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா் (படம்). கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என்று அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து தரணி அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.