சிதம்பரத்தில் தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் சாா்பில் ஸ்ரீவிஸ்வகா்மா ஆராதனை தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.சேகா் தலைமை வகித்தாா். ஆா்.பாவாடைபத்தா், ஆா்.மாரியப்பன், டி.தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் பி. முத்துக்குமாா் வரவேற்றாா். விழாவையொட்டி, சின்னசெட்டி தெரு, விழல்கட்டி பிள்ளையாா் கோவில் தெரு, மந்தங்கரை ஆகிய இடங்களில் ஐவண்ண அனுமன் கொடியை மாநில தலைவா் ஜி. சேகா் ஏற்றிவைத்துப் பேசினாா். நகரப் பொருளாளா் எஸ்.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.
விழாவில், ஸ்ரீவிஸ்வகா்மா ஆராதனை தினத்தை (செப்.17) அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் விஸ்வகா்மா சமுதாயத்தினருக்கு நிறைவேற்றித் தருவதாக தெரிவித்த வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

