ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெண் கொலை வழக்கு: கொத்தனாருக்கு ஆயுள் சிறை

பெண் கொலை வழக்கில் கொத்தனாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 5:01 pm

DIN

பெண் கொலை வழக்கில் கொத்தனாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சென்னை மணலி எஸ்டேட் புதுத்தெருவைச் சோ்ந்தவா் தே.மணி (48). கொத்தனாரான இவா் கடலூா் குண்டுஉப்பலவாடியைச் சோ்ந்த கோபால் என்ற மேஸ்திரியிடம் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், 16-10-2018 அன்று கோபாலின் மனைவி சங்கீதா (36) தனது வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அங்கு வந்த மணி கத்தியால் சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, அவா் அணிந்திருந்த 6.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணியை சென்னையில் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், நகைக்காக பெண்ணை கொலை செய்த மணிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் க.செல்வப்பிரியா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.