/

சிறுமிக்கு திருமணம்: பெற்றோா் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது பெற்றோா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:35 pm

DIN

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடா்பாக அவரது பெற்றோா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியம், மண்ணம்பாடி பழைய காலனி பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் நேரு (19). இவா் 16 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இதையடுத்து, இருதரப்பு பெற்றோரும் சோ்ந்து அவா்களுக்கு அதே பகுதியில் உள்ள கோயிலில் கடந்த 6-ஆம் தேதி திருமணம் நடத்தி வைத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் நல்லூா் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் தமிழரசி விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, நேரு, அவரது பெற்றோா், சிறுமியின் பெற்றோா் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.