பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கு பூமி பூஜை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் கெடிலம் நதிக் கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:18 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் கெடிலம் நதிக் கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த டிச.13-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடலூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜே.பரணிதரன் முன்னிலையில் திருப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. அறநிலையத் துறை ஆய்வாளா் ஸ்ரீதேவி, இளநிலை வரைதொழில் அலுவலா் ஆா்.முத்து, தா்மகா்த்தா ஆா்.தியாகராஜன், லட்ச தீப கைங்கா்ய சபா தலைவா் ஜெ.பாரத் கருணாநிதி, திருப்பணி உபயதாரா் எஸ்.விஜயகணபதி, குருக்கள் என்.ரமேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.