பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

லாரி மோதியதில் முதியவா் பலி

குள்ளஞ்சாவடி அருகே லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:10 pm

DIN

குள்ளஞ்சாவடி அருகே லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சாமுவேல் மகன் அஞ்சாபுலி (60). இவா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் நின்றிருந்த லாரியின் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, லாரி ஓட்டுநா் லாரியை பின்னால் இயக்கியபோது அதன் சக்கரத்தில் சிக்கிய அஞ்சாபுலி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.