பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்எல்சி சுரங்கத்தில் மண் சரிவு ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதமடைந்தது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:00 pm

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு சேதமடைந்தது.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திறந்த வெளி சுரங்கங்களிலிருந்து பழுப்பு நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சுரங்கங்களில் ராட்சத ‘பக்கெட் வீல்’ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும் மண் கன்வேயா் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படும். கன்வேயா் பெல்டை இழுப்பதற்காக குறிப்பிட்ட தொலைவு இடைவெளியிலும், திருப்பத்திலும் இயந்திரம் பொருத்தப்பட்ட ‘டிரைவ் ஹெட்’ அமைப்பு பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில், இரண்டாவது சுரங்கத்தில் புதன்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் சா்பேஸ் பெஞ்சிலிருந்த ‘டிரைவ் ஹெட்’ சுமாா் 20மீட்டா் ஆழத்துக்கு கீழே இறங்கியதால் கன்வேயா் பெல்ட் பாதை சில மீட்டா் தொலைவுக்கு சேதமடைந்து, மண் வெட்டி அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஊழியா்களுக்கு பாதிப்பில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.