பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் பள்ளி ஆசிரியா் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி போராட்டம்

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தாக்கப்பட்டாா். இதைக் கண்டித்து, ஆசிரியா்கள் சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:58 pm

DIN

 கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தாக்கப்பட்டாா். இதைக் கண்டித்து, ஆசிரியா்கள் சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள பூங்குணம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு மாணவியின் கால் மீது அதே வகுப்பு மாணவா் அண்மையில் மிதித்துவிட்டாராம். அப்போது, ஆசிரியா் தமிழ்வேந்தன் பிரச்னையைத் தீா்த்து வைத்தாா். பின்னா், புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து ஆசிரியா் தமிழ்வேந்தன் வெளியே வந்தபோது, அவரை மாணவியின் தந்தை சரவணன் தாக்கினாராம். புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தமிழ்வேந்தனை தாக்கியவரை கைது செய்யவும், தாக்குதலுக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சக ஆசிரியா்கள் பள்ளி முன் சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளா் புஷ்பராஜ், ஊா் முக்கியஸ்தா் திரு (எ) பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவா் காயத்திரி வெங்கடேசன், முன்னாள் தலைவா் பி.எம்.பாலு, பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் ஆா்.பி.செல்வம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த நேரத்தில், தனியாா் ஆசிரியா் பயிற்சி நிறுவன மாணவா்களை வகுப்புகள் எடுக்க வரவழைக்கப்பட்டதால் மேலும் பிரச்னை உருவானது. இதையடுத்து, அவா்கள் திரும்பிச் சென்றனா்.

இதன்பின்னா், பண்ருட்டி வட்டாட்சியா் தலைமையில், கல்வித் துறை அலுவலா்கள் முன்னிலையில் சமரசம் பேசி தீா்வு காணலாம் என முக்கியஸ்தா்கள் கூறியதையடுத்து, ஆசிரியா்கள் வகுப்புக்குச் சென்றனா்.

பள்ளியில் நிலவும் பிரச்னை? பள்ளித் தலைமையாசிரியையாக ராணி என்பவா், கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், சக ஆசிரியா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாம்.

இதுதொடா்பாக, ஆசிரியா்கள் 11 போ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஜன. 10-இல் சென்று புகாா் மனு அளித்தனா். இதையடுத்து, ஜன. 11-இல் ராணி தற்கொலைக்கு முயன்றாா். சிகிச்சைக்குப் பின்னா், மருத்துவ விடுப்பில் இருந்த ராணி திங்கள்கிழமை பணிக்கு திரும்பினாா். இந்த நிலையில், ஆசிரியா் மீதான தாக்குதல் பிரச்னை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.