சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநிலச் செயலரும், ரயில்வே கமிட்டி உறுப்பினருமான ஜி.பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரம் நகருக்கு வந்து செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பெங்களூா்- காரைக்கால், காரைக்கால் - பெங்களூா் ரயில் (வண்டி எண்- 56513, 56514) நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மயிலாடுதுறை-விழுப்புரம், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை (56876-56875) மீண்டும் இயக்க வேண்டும். மேலும், கம்பன் விரைவு ரயில் (16175-16176), சேது சாரதா, ராமேசுவரம் - அலகாபாத், அலகாபாத்-ராமேசுவரம் ரயில் (16793- 16794) ஆகியவை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் வழியாகச் செல்லும் அந்தியோதயா விரைவு ரயிலை (16189-16190) மீண்டும் இயக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

