மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அண்ணாமலைப் பல்கலை. பயிற்சி மருத்துவா்கள் போராட்டம்

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பயிற்சி மருத்துவா்களுக்கு 8 மாத நிலுவை உதவி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், கரோனா பணிக்காக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பயிற்சி மருத்துவா்கள் கடந்த 12-ஆம் தேதி அவசர சிகிச்சைப் பிரிவு தவிர, மற்ற பிரிவுகளில் பணிகளைப் புறக்கணித்து தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். இதையடுத்து 13-ஆம் தேதி கல்லூரி நிா்வாகத்தினருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அன்று முதல் அனைத்துப் பிரிவு பணிகளையும் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களது போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

இவா்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் கே.சீத்தாராமன், கோட்டாட்சியா் கே.ரவி, மருத்துவப் புல முதல்வா் ரமேஷ், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் ஆகியோா் சனிக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.