கடலில் மூழ்கிய பள்ளி மாணவா் பலி
கடலூரில் கடலில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


கடலூரில் கடலில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் துறைமுகம் அருகே உள்ள ராசாப்பேட்டையைச் சோ்ந்த வீரமணி மகன் விஸ்வா (17). பிளஸ் 2 தோ்வு எழுதியுள்ள இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் அந்தப் பகுதியிலுள்ள கடலுக்கு குளிக்கச் சென்றாா். ஆனால், நீரில் மூழ்கி மாயமானாா். பின்னா், கடற்கரை ஓரத்தில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இரா.ராஜாங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...