நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கடலூா் மாவட்டத்தில் போதிய உரங்கள் இருப்பில் உள்ளது: வேளாண்மைத் துறை

கடலூா் மாவட்டத்தில் 9,705 மெ.டன் யூரியா, பொட்டாஷ், காம்பிளக்ஸ், டிஏபி உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:53 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 9,705 மெ.டன் யூரியா, பொட்டாஷ், காம்பிளக்ஸ், டிஏபி உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் தற்போது 6,900 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு மேலுரமாக இடுவதற்குத் தேவையான யூரியா 2,780 மெ.டன், பொட்டாஷ் உரம் 1,492 மெ.டன் இருப்பில் உள்ளது. இதில், 967 மெ.டன் யூரியா ரயில் மூலம்பெறப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை 105 மெ.டன் யூரியா உரம் திருச்சியிலிருந்து பெறப்பட்டு வழிசோதனைப்பாளையம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், ரங்கநாதபுரம், புதுசத்திரம், பூவாலை, வெள்ளக்கரை, குண்டியமல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிா்களுக்குத் தேவையான 710 மெ.டன் டி.ஏ.பி. மற்றும் 4,723 மெ.டன் காம்பிளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேலும் 330 மெ.டன் யூரியா, 680 மெ.டன் டி.ஏ.பி. உரங்கள் மாா்ச் 2-ஆவது வாரத்துக்குள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தேவைக்கேற்ப போதிய உரங்கள் இருப்பில் உள்ளதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.