/

விருத்தகிரீஸ்வரா் கோயில் கோபுர கலசங்கள் மீட்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் இருந்து திருடுபோன கோபுர கலசங்கள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் இருந்து திருடுபோன கோபுர கலசங்கள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலத்தில் அமைந்துள்ள சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான விருத்தகிரீஸ்வரா் கோயில் புனரமைக்கப்பட்டு, கடந்த மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோபுர கலசங்கள் மாற்றப்பட்டு புதிய கலசங்கள் பொருத்தப்பட்டன.

கடந்த 1-ஆம் தேதி விருத்தாம்பிகை சந்நிதிக்கு மேலே உள்ள கோபுரத்திலிருந்த 3 கலசங்கள் திருடுபோனதையறிந்து பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். 3 கலசங்களிலும் சோ்த்து சுமாா் 400 கிராம் தங்கம் முலாம் பூசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் மாலா அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகா், அமுதம் தெருவில் வசிக்கும் பரமசிவம் மகன் சந்தோஷ்குமாருக்கு (49) இந்தச் சம்பவத்தில் தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரது வீட்டிலிருந்த 3 கோபுர கலசங்களையும் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.