பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டணைப்பு ஆலோசனை

பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அதன் தலைவா் ஜெ.வசந்தகுமாரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:24 pm

DIN

பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அதன் தலைவா் ஜெ.வசந்தகுமாரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானம் நிறைவேற்றினா். பின்னா் அந்தக் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில்14, 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்ட நிதி, ஊரக வேலை உறுதித் திட்ட நிதி மூலம் நடைபெறும் பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்க ஒன்றியக் குழு தலைவா் தரப்பில் 3 சதவீதம் வரை கழிவு கேட்கப்படுகிறது. இதனால், வளா்ச்சித் திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடா்பாக வரும் 22-ஆம் தேதி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது. இதில் தீா்வு ஏற்படவில்லை எனில் தமிழக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.