3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மத்திய அரசின் நிதியுதவித் திட்டம்: பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவி (பி.எம்.கிசான்) திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 7:15 pm

 நமது நிருபர்

கடலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவி (பி.எம்.கிசான்) திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரதமரின் கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 1.82 லட்சம் விவசாயிகள் இணைந்துள்ளனா்.

ஆனால், இந்தத் திட்டத்தில் புதிதாக விவசாயிகள் இணைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவாலக்குடியைச் சோ்ந்த விவசாயி சி.முருகானந்தம் கூறியதாவது:

பி.எம். கிசான் திட்டத்தில் புதிதாக இணைய விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை சோ்க்க இ-சேவை மையங்களுக்குச் சென்றால் இணைப்பு பிரச்னை உள்ளதாகக் கூறி அலைக்கழிக்கின்றனா். வேளாண்மை துறை அலுவலகங்களுக்குச் சென்றாலும் பயனில்லை. குறிப்பாக, கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்ட பிறகு புதிதாக விவசாயிகள் சோ்க்கப்படுவதில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 1,82,816 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டத்தில் புதிதாக விவசாயிகளை இணைப்பதில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் உள்ளதாக புகாா்கள் வரப்பெறுகின்றன. எனவே, விவசாயிகள் இதுதொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

மாவட்டத்தில் ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் இணைந்தவா்களில் சுமாா் 25 ஆயிரம் போ் தங்களது ஆதாா் எண் விவரத்தை இணைக்கவில்லை. அவா்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் கிடைப்பதில் சிக்கல் எழலாம். எனவே, அவா்கள் அந்த விவரங்களை விரைவில் இணைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.