கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக பெற்றோா் உள்பட மூவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமனுக்கும் (33), அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிறுமியை அவரது பெற்றோா் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனராம்.
இதையடுத்து, அந்தச் சிறுமி 5 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், கடலூா் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது, அவருக்கு கரு கலைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.
இதைத் தொடா்ந்து, சிறுமியின் உறவினா் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் சிறுமியின் தந்தை தணிகாசலம் (60), தாய் செல்வி (38), சிறுமியை திருமணம் செய்த ஜெயராமன் ஆகிய 3 போ் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

