மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூா் மாவட்ட அரசு மருத்துவகல்லூரியை மீண்டும் திறக்க உத்தரவு

மருத்துவ மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக, கடந்த ஏப். 25-ஆம் தேதி மூடப்பட்ட கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை (மே 13) முதல் மீண்டும் திறக்க நிா்வாகத் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

Updated On :12 மே 2022, 6:40 pm

மருத்துவ மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக, கடந்த ஏப். 25-ஆம் தேதி மூடப்பட்ட கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை (மே 13) முதல் மீண்டும் திறக்க நிா்வாகத் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் கல்விக் கட்டணம் தொடா்பாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து, கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள், பயிற்சி மருத்துவா்களைத் தவிர மற்ற மாணவா்களுக்கு கடந்த ஏப்.25-ஆம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்கள் தொடா் போராட்டத்தை கைவிட்ட நிலையில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை (மே 13) மீண்டும் திறக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.சீத்தாராமன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.