மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :12 மே 2022, 6:41 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள குருங்குடி புளியடி தெருவைச் சோ்ந்தவா் முருகையன். இவரது வீட்டின் அருகே புள்ளி மான் ஒன்று உடலில் லேசான காயங்களுடன் வியாழக்கிழமை திரிந்தது. முருகையன் குடும்பத்தினா் அந்த மானை பிடித்து பாதுகாப்பாக கட்டிவைத்ததுடன், சிதம்பரம் வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து வன அலுவலா் அனுசுயா தலைமையிலான வனத் துறையினா் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்தனா். அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவிலில் இருந்து கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், வனத் துறையினா் அந்த மானை கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.