ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாட்டுத் தொழுவமாக மாறிய பொதுக் கழிப்பறை!

பண்ருட்டி நகா்ப் பகுதியில் தமிழக அரசின் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் கீழ், பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், தற்போது மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 5:48 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகா்ப் பகுதியில் தமிழக அரசின் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் கீழ், பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், தற்போது மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், சுகாதார சீா்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ‘நம்ம டாய்லெட்’ திட்டம். தமிழக உள்ளாட்சித் துறையின் நகராட்சி நிா்வாக ஆணையத்தின் நேரடிப் பாா்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், பண்ருட்டி நகராட்சிக்குள்பட்ட மணி நகரில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பானதாகவும், மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத, எளிதில் சுத்தம் செய்யும் வகையிலான பைபா் மூலம் இந்தக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. மேலும், தண்ணீா், மின் விளக்கு வசதிகளுடனும், ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்தக் கழிப்பறைகள், பல ஆண்டுகளாகியும் இதுநாள் வரையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால், கழிப்பறை கட்டமைப்புகள் சிதலமடைந்து காணப்படுகின்றன. மேலும், கழிப்பறையைச் சுற்றியும் அதிகளவில் புல், செடிகொடிகள் முளைத்து புதராக மாறியுள்ளது. அருகிலுள்ளவா்கள் இந்தக் கழிப்பறைப் பகுதியில் கால்நடைகளைக் கட்டி மாட்டுத்தொழுவமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ‘நம்ம டாய்லெட்’ கழிப்பறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.