ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூா்: மழைக்கு 20 குடிசைகள் சேதம்

கடலூா் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 20 குடிசைகள் சேதம் அடைந்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:06 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 20 குடிசைகள் சேதம் அடைந்ததாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 67.4 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

எஸ்.ஆா்.சி. குடிதாங்கி 48, கடலூா் 47.9, வானமாதேவி 29.6, கொத்தவாச்சேரி 24, புவனகிரி 21, வடக்குத்து 16, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா 14, அண்ணாமலை நகா் 13.8, பண்ருட்டி 13, குறிஞ்சிப்பாடி 12, சேத்தியாத்தோப்பு 11, விருத்தாசலம் 10, ஸ்ரீமுஷ்ணம் 7.3, லக்கூா் 7.1, பெலாந்துறை 6, சிதம்பரம், பரங்கிப்பேட்டை தலா 5.6, மே.மாத்தூா், லால்பேட்டை தலா 5, குப்பநத்தம் 4.4, தொழுதூா் 4, வேப்பூா் 3, காட்டுமயிலூா் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 397.70 மி.மீ. மழையும், சராசரியாக 15.91 மி.மீ. மழையும் பதிவானது.

மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இதுவரை 8 கால்நடைகள் உயிரிந்துள்ளன; 20 குடிசைகள், 7 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன; சுமாா் 51.5 ஹெக்டோ் பரப்பிலான வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.