ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விருத்தாசலத்தில் ஓடை ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஓடை ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஓடை ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விருத்தாசலம் - கடலூா் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே அமைந்துள்ள முல்லா ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கடைகள் கட்டப்பட்டன. ஏரி, அதன் நீா்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 10.1.2018 அன்று உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 29.8.2022 அன்றுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில் 23.8.22 அன்று முல்லா ஏரி பகுதியில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

இதன் தொடா்ச்சியாக விருத்தாசலம், ஆலடி சாலைப் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருத்தாசலம் வட்டாட்சியா் தனபதி, நகராட்சி ஆணையா் சேகா் ஆகியோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.