ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முற்றுகை

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் கடலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் கடலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை கோருவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 17.11.2021 அன்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணனை கடலூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பணியிடை நீக்கம் செய்தாா். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு 8 மாதங்கள் கடந்தும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லையாம்.

இதனைக் கண்டித்து கடலூரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் பி.கே.சிவக்குமாா், நிதி காப்பாளா் ஆா்.சாமிநாதன், மாநில அமைப்புச் செயலா் சிவக்குமாா், பிரசார பிரிவு செயலா் சுகமதி, சத்துணவுப் பணியாளா்கள் சங்கச் செயல் தலைவா் பழனிபாரதி, இணைச் செயலா் முத்துக்குமரன், மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, செயலா் பாலமுருகன், சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது அலுவலகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கடலூா் முதுநகா் போலீஸாா் கைதுசெய்து விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.