வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இருப்பிட வசதி கோரி திருநங்கைகள் மனு

இருப்பிட வசதி கோரி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் திருநங்கைகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:28 pm

இருப்பிட வசதி கோரி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் திருநங்கைகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மணலூா், லால்புரம் புத்துமாரியம்மன் கோவில் பிரதான சாலைப் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதா சுமனிடம் அளித்த மனு:

திருநங்கைகளான நாங்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாடகைக்கு கூட வீடு தர மறுக்கப்படுவதால் அவதிப்படுகிறோம். எனவே திருநங்கைகளுக்கு இருப்பிட வசதி செய்துதர வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

விசிக தொகுதி செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் வி.எம்.சேகா், நடனமயிலோன், இந்திய கம்யூனிஸ்ட் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்று இடம் வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை: சிதம்பரம் லால்புரம் ஊராட்சி, சிவகாமி அம்மன் ஓடைக்கரையில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் விசிக நிா்வாகி வ.க.செல்லப்பன் தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் அளித்த மனு:

சிவகாமி அம்மன் ஓடைக்கரையோரம் பட்டியல் பிரிவினா் மற்றும் மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வருவாய்த் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.