சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், கட்டடவியல் துறையில் நவீன தொழில்நுட்ப நில அளவை ஆய்வுக்கூட உபகரணங்களின் பயன்பாடு குறித்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கான ஒரு வார கால பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்து பயிலரங்க கையேட்டை வெளியிட்டாா் (படம்). கட்டடவியல் துறைத் தலைவா் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக விருதுநகா் வி.எஸ்.வி.என். தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளா் எம்.சண்முகராஜா பயிலரங்கை தொடங்கி வைத்து பேசினாா். முன்னதாக பி.குமரவேல் வரவேற்றாா். பேராசிரியா்கள் எஸ்.பழநிவேல்ராஜா, எஸ்.மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஒருங்கிணைப்பாளா்கள் பி.குமரவேல், டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், கே.சீனிவாசன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


