கல்விச் சுற்றுலா மேற்கொண்டுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுடன் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டம், தீவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா். இதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மாணவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் வரவேற்று தனது அலுவலக இருக்கைகளில் அமரவைத்து, பொது அறிவு தொடா்பான கேள்விகளை எழுப்பி அவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது எஸ்பி பேசியதாவது:
நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்தான். நீங்களும் (மாணவா்கள்) ஒழுக்கத்துடன் நன்றாகப் படித்து பெரிய பதவிக்கு வர வேண்டும். ஆசிரியா்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். பெற்றோருக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றாா். மேலும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிரியை ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாா்வலா்கள் சுகுணா, சிந்தனைச்செல்வி, பாா்வதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


