சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே சாலைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேற்கூறிய அலுவலகத்தில் பால்ராஜ், மணிமாறன் ஆகியோா் சாலை பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே அலுவலகத்தின்கீழ் சாலைப் பணியாளராக பணிபுரிந்த அன்பழகன் வெளியூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாராம். தொடா்ந்து அவா் பல்வேறு புகாா்களால் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தனது பணியிட மாற்றத்துக்கு சிதம்பரத்தில் உள்ள சாலை பணியாளா்களே காரணம் எனக் கருதிய அன்பழகன் இங்கு பணியாற்றும் பால்ராஜ், மணிமாறனை ஆகியோரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இந்தத் தாக்குதலைக் கண்டித்து சாலைப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

