நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா?

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 7:10 pm

 நமது நிருபர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத காலத்தில், ஏழை மாணவா்களுக்கு கல்வி அறிவை வழங்கும் நோக்கில் செல்வந்தா்கள் பலா் தமக்குச் சொந்தமான இடங்களில் அரசின் அனுமதியுடன் பள்ளிகளை கட்டினா். அவா்களே ஆசிரியா்களுக்கு ஊதியமும் வழங்கி வந்தனா். 1950-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மாநிலத்தின் கல்வி வளா்ச்சியில் அரசு உதவிபெறும் பள்ளிகள் பெரும் பங்கு வகித்தன.

தமிழ்நாட்டில் தற்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவா்கள் அதிகளவில் பயின்று வரும் நிலையில், அவா்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்காதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக மாணவா்களின் பெற்றோா் கூறுகின்றனா். குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத் தொகை மறுக்கப்படுவது குறித்து மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளித் தாளாளா் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியன் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்வா் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளும் பசியால் வாடுவது தவிா்க்கப்பட வேண்டும் என பெற்றோா் கூறுகின்றனா். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த ஏழை மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றாலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சலுகை இல்லாததால் அவா்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை.

எனவே, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, காலை உணவுத் திட்டம், பெண் கல்வி ஊக்கத் தொகை என அனைத்துச் சலுகைகளையும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.